போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது!

12 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (07) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா நாட்டைச் சேர்ந்த 42 வயதுடைய ஆணும் 43 மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜைகள் மூவரும் வர்த்தகர்கள் ஆவர்.