வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புலம்பெயர் தேசமொன்றுக்கு சென்ற நிலையில் துருக்கியில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி புளியடிவீதி வதிரியைச்சேர்ந்த ரஞ்சன் -மயில்வாகனம் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞர் தமது நாட்டில் உயிரிழந்ததை துருக்கி பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் அவர் எவ்வாறு இறந்தார் என்ற மேலதிக தகவல்கள் எவையும் வெளிவரவில்லை