புனித ஞாயிறு தாக்குதல் அரசுக்கு மிகப்பெரும் பின்னடைவு: ரணில்

சிறீலங்காவில் புனித ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் தற்போதைய தமது அரசுக்கு மிகப்பெரும் பின்னடைவு எனவும், எனவே அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

நேற்று (17) அலரிமாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

அரச தலைவர் தேர்தல் நாள் அறிவிக்கப்படவில்லை, எனவே நாம் தற்போது அதில் போட்டியிடுபவர் குறித்து முடிவு செய்ய வேண்டியதில்லை. 2015 ஆம் ஆண்டு நாம் வழங்கிய உறுதிமொழிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். அவற்றை நாம் இதுவரையில் நிறைவேற்றவில்லை.

அவற்றை நிறைவேற்றிய பின்னரே தேர்தலுக்கான திட்டத்தை வகுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரணில் தாம் வழங்கிய வாக்குறுதிகள் என்பது சிங்கள மக்களுக்கானது எனவும், சிறுபான்மை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர்கள் ஒருபோதும் நிறைவேற்றப்போவதில்லை எனவும் அரசியல் அவதானி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.