பிள்ளையானின் சாரதி குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பவரை  வெள்ளிக்கிழமை (18)  சி.ஐ.டி. யினர் கைது செய்துள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் கடந்த 8ம் திகதி பிள்ளையான் அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையையடுத்து கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தலுடன் தொடர்புபட்ட பிள்ளையானின் சாரதியான ஜெயந்தனை கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வுத் துறையினர் அவரது வாழைச்சேனை வீட்டில் வைத்து கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர்.