பிரித்தானியா நாடு கடத்தவுள்ள ஈழத்தமிழர்…

பிரான்ஸில் குழந்தை ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரெஞ்சு அதிகாரிகள் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் அவரை தேடி வருவதாக அறிவித்திருந்த நிலையில் சுஜந்த் கேதீஸ்வரராசா என்ற 30 வயதுடைய ஈழத்தமிழர் லிவர்பூல் (Liverpool) நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் அவர் முன்னலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது நாடு கடத்தல் செயன்முறை தொடங்கும் வரை அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.