பிரித்தானியாவில் இருந்து பல பத்தாயிரம் செல்வந்தர்கள் வெளியேறிவருவதாகவும் அது இந்த வருடம் மேலும் அதிகரித்துள் ளதாகவும் தெரிவிக்கப்படுகின் றது.
பிரித்தானியாவில் ஏற்படுத் தப்பட்ட வரி மறுசீரமைப்பு, அரசியல் உறுதியற்ற தன்மையே அதற்
கான காரணம் என பிரித்தா னியாவின் ஊடகம் கடந்த வியாழக் கிழமை(26) தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு 16,500 செல்வந்தவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளனர் என ஹென்லி பிறைவேற் வெல்த் மைக்கிரேசன் நிறுவனம் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளியேறும் செல்வந்தர்களில் பலர் சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர்.
பிரித்தானியாவில் முன்னர் இருந்த வரிச் சலுகைகள் செல்வந்தர்களுக்கு அதிக நன்மைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதன் மறுசீரமைப்பு அவர்களைவெளியேற வைத்துள் ளது. 2024 ஆம் ஆண்டும் 10,800 செல்வந்தர்கள் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தனர். 2025 ஆம் ஆண்டு வெளியேறிய செல்வந்தர்களின் முதலீட்டு சொத்து மதிப்பு 90 பில்லியன் டொலர் களாகும்.
சீனாவில் இருந்தும் ரஸ்யாவில் இருந் தும் செல்வந்தர்கள் வெளியேறினாலும், பிரித்தானியாவில் இருந்து வெளியேறுபவர்கள் சீனாவை விட இரண்டு மடங்கு அதிகமமாகவும், ரஸ்யாவை விட 10 மடங்கு அதிகமாகவும் உள்ளனர்.ஒரு மில்லியன் டொலர்களை பணமாக முதலீடு செய்யும் நிலையில் உள்ளவர்கள் செல்வந்தர்கள் என்ற தரவரிசைப்படுத்தப்படு கின்றனர்.