பிரதி நிதியமைச்சர் ஹர்சன சூர்யபெரும தமது பதவியில் இருந்து விலகல்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி நிதியமைச்சருமான ஹர்சன சூர்யபெரும தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தமது பதவி விலகல் கடிதத்தை அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்
வெற்றிடமாகியுள்ள நிதியமைச்சின் செயலாளர் பதவியை ஏற்று கொள்ளும் வகையில் அவர் பதவி விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஹர்சன சூர்யபெருமவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக அறியப்படுத்தியுள்ளார்.
இதன்படி இன்று (20) முதல் அமுலாகும் வகையில் ஹர்சன சூர்யபெருமவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.