பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவுக்கு சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி அழைப்பு

திருகோணமலை மூதூர் – தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி என்ற 60 வயதுடைய பெண், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை புதன்கிழமை காலை 10 மணியளவில் திருகோணமலை பழைய பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.