பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சி.சிவரூபன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பளை வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் வைத்தியர் எஸ். சிவரூபன் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைதான பளை வைத்தியசாலை வைத்தியரின் விடுதலையை வலியுறுத்தியும் பதில் வைத்தியரை நியமிக்குமாறு கோரியும் மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.