நீதிமன்ற வழக்குகளை விசாரிப்பது நீதியமைச்சரின் பொறுப்பு அல்லவென்று புதிய நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்சண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் புதிய நீதியமைச்சராக சட்டத்தரணி ஹர்சண நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், நீதியமமைச்சர் என்பவர் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பைக் கொண்டவர் அல்ல. வழக்குகள் தொடர்பில் தலையிடவும் முடியாது.
வழக்குகள் தொடர்பான விடயங்களுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் என்பன இருக்கின்றன.
அவர்களின் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்குத் தேவையான மனித வளம் உள்ளிட்ட ஏனைய வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமே நீதியமைச்சின் வேலையாகும் என்றும் அமைச்சர் ஹர்சண நாணயக்கார தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.



