இலங்கையின் அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னமும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்து வருவது குறித்து சர்வதேச டிஜே டொம் மொனாக்லே கரிசனை வெளியிட்டுள்ளார்.
நான் அறுகம் குடாஇலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன் ஆனால் அது இஸ்ரேலின் டெல்அவி போல காணப்படுகின்றது என இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அறுகம்குடாவில் காணப்படும் பல உணவகங்களின் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ள அவர் அந்த உணவகங்களின் பெயர்கள் ஹீப்ருவில் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
சில கட்டிடங்களில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஆதரவான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதையும் அவர் காண்பித்துள்ளார். இஸ்ரேலியர்கள் அறுகம்குடாவில் நிகழ்வுகளை நடத்துகின்றனர் அதில் கலந்துகொள்வதற்கு உள்ளுர் மக்களிற்கு இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த நிலைமை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.