தோ்தல்கள் எப்போது நடைபெறும்? ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்

இந்த ஆண்டு உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் பொதுத் தேர்தலானது இந்த ஆண்டு அன்றி அடுத்த ஆண்டு நடத்தப்படும்.

இதற்கான நிதியொதுக்கம், 2025ம் ஆண்டுக்கான பதீட்டில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உரியது என்றும், தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அரசாங்கம் அதனுடன் தொடர்புகொள்ளும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.