பன்முக கலந்துரையாடல்கள் மூலம் அமைதி மற்றும் கூட்டுத்தலைமைத்துவத்தை உருவாக்குதல் செயலமர்வின் இரண்டாம் பகுதி பயிற்சி செயலமர்வு இன்றும் நாளையும் யாழ்ப்பாணம் ஜெட்விங்ஸ் விருந்தினர் விடுதியில் காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை இலங்கைக்கான ஜக்கிய நாடுகள் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
வவுனியா கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசியல் பிரதிநிதிகள், அரச ஊழியர்கள் பொது அமைப்பினருக்கான இச் செயலமர்வில் 40ற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.