திருக்கோவில் தம்பிலுவில் மயானத்தில் சோதனைகளும் அகழ்வும் ஆரம்பம்

கருணா குழு (TMVP) இன் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் இனியபாரதியின் கைது இடம்பெற்ற பின்னர் இடம்பெற்று வரும் தொடர் கைதுகளும் விசாரணைகளும் பல திருப்பங்களைக் கொடுத்துவரும் நிலையில்,
அவர்களின் கல்முனை அலுவலகப் பொறுப்பாளர் என அறியப்படும் நபர் மூலம் கல்முனை, திருக்கோவில் உள்ளிட்ட பல அலுவலகங்கள் சோதனை செய்யப்பட்டதோடு நேற்று முன்தினம் திருக்கோவில் தம்பிலுவில் மயானத்திற்கும் அவர் அழைத்து வரப்பட்டு சில இடங்களும் அடயாளப்படுத்தப்பட்டதாக அறிய முடிந்தது.

இந்நிலையில் இன்று (31.07.2025) தம்பிலுவில் மயானத்தில்தேடுதல் மற்றும் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.