திருகோணமலை மற்றும் முல்லைத்தீவுக்கு இடையில் உள்ள கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் (GSMB) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று சனிக்கிழமை (31) பிற்பகல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் தெரிவித்துள்ளது.



