ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ப.அரியநேத்திரனை ஆதரித்து வவுனியா நகரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் நடந்த இந்த விநியோக பணியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பொதுஅமைப்புக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.