இலங்கையில் அரச தலைவருக்கான தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இந்த வாரம் அவசரமாக இலங்கை வந்துள்ளார்.
இலங்கை வந்துள்ள அவர் இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, பிரதமர் தினேஸ் குணவர்த்தனா, எதிர்க்கட்சித் தலைவரும் அரச தலைவர் வேட்பாளருமான சஜித் பிரேதமதாசா, மற்றும் அரச தலைவர் வேட்பாளர் அனுரகுமார திஸநாயக்க மற்றும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் அரச தலைவர் வேட்பாளர் நாமல் ரஜபக்சா ஆகிரோர் உட்பட மலைய கத்து கட்சிகள், கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், மனோ கணேசன் மற்றும் தமிழ் கட்சி களையும் சந்தித்திருந்தார்.
அஜித் தோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் வியாழக் கிழமை(29) நடைபெற்ற சந்திப்பின் போது தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல் வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை எனவும், இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு இலங் கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவ ஞானம் சிறீதரன்,எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும், ரெலோவின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.
அதன்படி சந்திப்பில் சிறீதரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகி யோர் கலந்துகொண்டிருந்தனார். இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் ஜனாதிபதித் தேர்தல் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கடந்த 75 வருடகால அனுபவத்தில் தமிழ் மக்களால் ஒற்றையாட்சியின் கீழ் வாழ முடியாது என்பதைத் தாம் புரிந்துகொண்டிருப்பதாகவும், அதே போன்று அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதன் காரணமாக அதனூடாக தமிழ் மக்களால் முன்நோக்கிச் செல்ல முடியாது எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் எம்.பி., அஜித் டோவலி டம் எடுத்துரைத்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி முறைமையை வென்றெடுப்பதற்கு இந்தியா உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை குறித்தும், தேர்த லில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தீர்மானம் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.
இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் வாக்குவீதம் குறித்தும் கேட்டறிந்த அஜித் டோவல், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன் படுத்துவதே சிறந்தது என்று ஆலோசனை வழங்கினார்.
அத்தோடு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தான் கூறப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், இருப்பினும் இத் தகைய தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் ஜனநாயகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது குறித்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்கள் சார்பில் நிறுத்தப்படுவது பிராந்திய நாடுகளையும், இலங்கை அரசையும் மிகப்பெரும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியதையே டோவலின் அவசர பயணம் காண்பித்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.