தமிழரசு பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவு – குழப்பத்தால் மாநாடு ஒத்திவைப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலையைச் சேர்ந்த குகதாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பொதுச் செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் குகதாசனுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் வேட்பாளராக சிறிநேசனுக்கு ஆதரவாக 104 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பை சேர்ந்த எட்டுப் பேர் குகதாசனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எட்டு மேலதிக வாக்குகளால் அவர் வெற்றிபெற்றுள்ளார்.

இதேவேளை நாளை நடைபெறவிருந்த கட்சியின் மாநாடு குழப்பங்களையடுத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளா் தெரிவு தொடா்பாகவே குழப்பம் ஏற்பட்டுள்ளது.