தண்ணீர் சேகரிக்க சென்ற குழந்தைகளை தாக்கிய இஸ்ரேல்!

காஸாவில் உள்ள நீர் விநியோக மையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தண்ணீர் சேகரிக்க வரிசையில் காத்திருந்த குழந்தைகள் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவம், தங்களது ஏவுகணை ஒரு இஸ்லாமிய ஜிஹாத் போராளியைத் தாக்கும் நோக்கில் ஏவப்பட்டதாகவும், ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக சில மீட்டர்கள் கடந்து விழுந்ததாகவும் விளக்கமளித்துள்ளது.