ஜனாதிபதி ரணிலை சந்தித்த அஜித் தோவல்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.