ஜனாதிபதித் தோ்தல் எப்போது நடைபெறும்? தோ்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ள தகவல்

ஜனாதிபதித் தோ்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் நேற்று தேர்தல்கள் திணைக்கள பணிமனையில் நடந்தது.

இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் சமன் சிறி ரத்நாயக்க மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார். தேர்தல்களை நடத்துவதற்கு நிதி சம்பந்தமாக காணப்பட்ட பிரச்னை தற்போது இல்லாமல் போயுள்ளது. மற்றொரு தெளிவுபடுத்தல் கூட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக 40 அரசியல் கட்சிகள் பங்குபற்றியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.