செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றும் மனித எச்சங்கள் மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றும் முக்கியமான எச்சங்கள் மீட்கப்பட்டன.
ஏற்கனவே நீல நிற புத்தகப்பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவனின் முழுமையான என்புக் கூட்டுத்தொகுதி இன்று (01) மீட்கப்பட்டுள்ளது.

அதேநேரம் காலணி ஒன்றும் பொம்மை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன் பின்னிப்பிணைந்த நிலையில் சில என்புக்கூட்டுத் தொகுதிகளும் இன்று அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள்  தரப்பு சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான பழைய வழக்கையும் தற்போதைய புதிய வழக்கையும் ஒரே வழக்காக முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.