யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துப்பாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட பரீட்ச்சார்த்த அகழ்வு பணிகள் நேற்றுடன் நிறைவு செய்யப்பட்டன. அதற்கமைய, நேற்று வரையான 9 நாட்களில் மொத்தமாக 19 முழுமையான மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக் கூட்டுத் தொகுதிகளும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறித்த எலும்புக்கூடுகளை நீதிமன்றின் பாதுகாப்பில் வைப்பார் எனவும் சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான உத்தேச திகதியாக எதிர்வரும் 20 ஆம் திகதியை நீதவான் அனுமதித்துள்ளார். இந்த உத்தேச திகதிக்குள், சமர்பிக்கப்பட்ட பாதீட்டுக்கான நிதி கிடைக்கப்பெற்றால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியை உத்தேச திகதியில் ஆரம்பிக்க முடியுமா என்பதை நீதிமன்றம் அறிவிக்கும் என சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளா