செம்மணியில் மேலும் இரண்டு மனித என்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துபாத்தி மனிதப்புதைகுழியின்  நேற்றைய தினம் (06) அகழ்வு நடவடிக்கையின் போது இரண்டு மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 11வது நாள் அகழ்வுப் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் இன்று வரை 44 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் மொத்தமாக 47 என்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிக்கு அருகாமையில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில்  கடந்த 4ம் திகத தொடக்கம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அந்த இடத்திலும் சான்றும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டன.
மேலும், அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இடத்திற்கு அருகாமையில்  இன்றையதினம் ஜேசிபி இயந்திரம் மூலம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது அதிலும் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன

யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவ குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.