செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் காட்சிப்படுத்தல்: இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை கருத்து

செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடும் குறித்த தீர்மானமானது இலங்கையின் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றின் ஊடாகவே இதனை தெரிவித்துள்ளது.

மேலும், பல தசாப்தங்களாக தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை குறித்து அயராது திடமாக பதில்களை தேடி வரும் குடும்பங்களுடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நீதி மற்றும் உண்மையை பின்தொடர்வதில் அவர்களின் தாங்குதன்மை ஒரு தார்மீக வழிகாட்டியாக தொடர்ந்து செயல்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இலங்கை அரசாங்கம் குறிப்பாக காணாமல்போனோர் அலுவலகம் தங்கள் பணியை வெளிப்படை தண்மையுடனும் விரைவாகவும், காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் அர்த்தமுள்ள ஆலோசனையுடனும் நிறைவேற்ற வேண்டும் எனவும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.