செம்மணியில் காட்சிப்படுத்தப்பட்ட சான்று பொருட்களை யாரும் அடையாளம் காட்டவில்லை

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை நேற்றைய தினம் (05) சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டனர்.

செம்மணி புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள், நேற்று பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றியிருந்தனர். அதில் தனி மனிதர்களுடன் தொடர்புடைய 43 சான்றுப் பொருட்கள் மாத்திரமே காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்தார்.

தனி மனிதர்களுடன் தொடர்புப்படாத மேலும் சில சான்றுப் பொருட்கள் நேற்றைய தினம் காட்சிப்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும் நேற்றைய தினம் காட்சிப்படுத்தப்பட்ட சான்று பொருட்களை எவரும் அடையாளம் காட்டவில்லை என்றும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்தார்.