செம்மணியில் இன்று மேலும் மூன்று என்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று (28) மேலும் மூன்று என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இதுவரை சித்துப்பாத்தியில் இருந்து மொத்தமாக 104 என்புக்கூட்டுத்தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.

அவற்றில், 97 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சித்துப்பாத்தி புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் 23 நாள் அகழ்வுப்பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் நாளையும் (29) அகழ்வுப்பணிகள் தொடரவுள்ளன.