உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சுரேஷ் சலேயின் மனுவில் தம்மையும் இணைத்துக்கொண்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி வழங்குமாறும், அந்த மனுவை நிராகரிக்குமாறும் பேராயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.



