மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது தொடர்பில் முஸ்லிம் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை வவுணதீவு மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள பகுதியில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் த.சிவராஜா (55வயது) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை வவுணதீவு மூன்றாம் கட்டையில் உள்ள தனது காணியை பார்வையிடச்சென்றவரே இவ்வாறு அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் இது தொடர்பில் ஆயித்தியமலையை சேர்ந்த முகமட் றஸ்மி என்பவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முஸ்லிம் இளைஞர்கள் ஆயித்தியமலையில் தமிழ் பெண் ஒருவரை மணமுடித்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.