சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாமல் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம் 20ஆவது திருத்தச்சட்டவரைவை நிறைவேற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டவரைவு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் 4 சரத்துகளை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் சரத்துகளை நீக்கிவிட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் மாத்திரம் 20 ஐ நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.