சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இன்று (17) பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இஸ்ரேல் – ஈரான் மோதல் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரி இருந்தனர். எனினும் சபாநாயகர் இந்த கோரிக்கையை நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்புவதற்கு முயன்றபோதும் பின்னர் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்ப முயன்ற போதும், சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
இதனையடுத்தே, ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் பாராளுமன்றில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
எனினும் தமிழரசுக்கட்சி கட்சியினர் தொடர்ந்தும் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றியிருந்தனர்.