க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறது – பா.சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

‘க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சில விடயங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறது’ என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மத நல்லிணக்க திட்டம் உருவாக்கப்பட வேண்டும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ‘அது தொடர்பில் உரிய வகையில் ஆராய்ந்து தீர்வு வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.