கைது செய்யப்பட்ட விவசாயியை விடுவிக்கக் கோரியும், குருந்தூர் மலையில் நில அபகரிப்புகளை நிறுத்தக் கோரியும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் போராட்டம்

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால்  போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பாக புதன்கிழமை (4) மதியம் 12 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.