கிழக்கு மாகாண நிலப் பிரச்சினை தொடர்பில் சுவிட்சர்லாந்து,அவுஸ்ரேலிய தூதுவர்களிடம் எடுத்துரைப்பு

சுவிட்சர்லாந்து (Switzerland)  நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் அவுஸ்ரேலியாவின்   இலங்கைக்கான  தூதுவர்  ஆகியோர் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதன் போது   கிழக்கு மாகாணத்திலுள்ள உயர் அரச அதிகாரிகள், சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களை சந்தித்து இருந்தனர்.
இந்த சந்திப்பின்  போது  அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பின் சார்பில் இவ்வமைபப்பின் பணிப்பாளர் கண்டுமணி லவகுசராசா, பிரதிப் பணிப்பாளர்  அழகுராசன்  மதன் ஆகியோரையும்  சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்களின் போது   கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை சார்ந்த சவால்கள், நில உரிமை பிரச்சினைகள், வாழ்வாதார மீட்பு தேவைகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கும் நீதி மற்றும் அரசியல் தீர்வு என்ன என்பது தொடர்பாகவும்  குறித்த தூதுவர்களிடம் வலியுத்தி கூறப்பட்டது.
இதன்  போது AHRC குழுவினரால் கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களின்  பிரச்சினைகள் அடங்கிய ஆவணம் ஒன்றும் வழங்கி வைக்கப் பட்டது.