எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து : 100 கோடி அமெரிக்க டொலர்களை நஷ்ட ஈடாக வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்குள்ளானதால் கடல் சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 100 கோடி அமெரிக்க டொலர்களை நஷ்ட ஈடாக வழங்குமாறு சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்திற்கு இன்று வியாழக்கிழமை (24) உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பிற்கு அருகே சிங்கப்பூர் கொடியுடன் வந்தடைந்த எக்ஸ்-பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்ப்பட்டு கடல் பகுதி பெரும் பாதிப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.