உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் கைது

எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 02 ஆம் திகதி) 489 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக  காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 388  முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 101 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய  ஏனைய குற்றங்கள் தொடர்பில் 38 வேட்பாளர்களும் 168 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 36 வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.