இலங்கை – பிரான்ஸுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கும் பிரெஞ்சு குடியரசுக்கும் இடையிலான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், இருதரப்பு ஒப்பந்தத்தில் அதிகாரபூர்வமாக கையொப்பமிடப்பட்டது.

இந்த ஒப்பந்தம், இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல் திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. இது, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் உறுதியை வலியுறுத்துகிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பை வழிநடத்துவதில் ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து, பிரான்ஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது.  இருதரப்பு ஒப்பந்தத்தில், இலங்கை அரசாங்கத்திற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. எம். மஹிந்தா சிறிவர்தன மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்திற்காக திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பலதரப்பு விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைத் துறையின் உதவிச் செயலாளர் வில்லியம் ரூஸ் ஆகியோர்  கையெழுத்திட்டுள்ளனர்.