இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையைச் சேர்ந்த பொதுமகன் ஒருவரை இந்தியக் கடலோர காவல்படையினர் கைதுசெய்துள்ளனர்.
தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் வைத்து அவரைக் கைது செய்துள்ளனர்.

கைதாகியவர் மட்டக்களப்பு, ஏறாவூர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.
தமிழகத்தில் அகதியாகத் தஞ்சமடையும் நோக்கத்தில் அவர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக மன்னாரில் இருந்து பயணித்துள்ளார்.

அவருடைய பெற்றோர், தமிழகத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் முகாமில் வசித்து வருவதாக முதற் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு திரும்புமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்து வரும் நிலையில் மற்றும் ஒரு நபர் இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.