இலங்கையில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் மரணம்

இலங்கையில்,கொரோனா தொற்று உறுதியான மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 6 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 641 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என  சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.