இலங்கையில் அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

WhatsApp Image 2024 09 17 at 21.28.32 1f61eecb இலங்கையில் அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன் - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்துடனே தான் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முன் வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் துரிதமாக நியாயம் வழங்கப்படும் எனவும்  ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும், சஜித் மற்றும் அநுர கூறுவது போன்று உடன்படிக்கைகளை மீறி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை மக்கள் புரிந்து செயற்பட வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.

மன்னார் பஸ் நிலையத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  ரணில் விக்ரமசிங்க இவ்வாறு  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.