இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி 11 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 86 இந்திய மீனவர்களையும் இலங்கைக் கடற்படை எச்சரித்து திருப்பியனுப்பியுள்ளது.
இலங்கைக்கு சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து வருபவர்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து வடக்கு கடல் பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்துப் பணிகளை அதிகரிப்பதாக கடற்படை அறிவித்திருந்தது.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின்போதே எல்லை மீறிய இந்திய மீனவர்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.