இன்று திருக்கோவில் தம்பிலுவில் மயானத்தில் நடந்த அகழ்வுப் பணி நிறுத்தம்…

Unknown 16 இன்று திருக்கோவில் தம்பிலுவில் மயானத்தில் நடந்த அகழ்வுப் பணி நிறுத்தம்...

திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் பொது மயானத்தில் இனியபாரதி தரப்பினரால் கொன்று புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் திருக்கோவிலைச் சேர்ந்த சிம் அட்டை விற்பனை முகவரான அருளானந்தன் சீலன் எனும் 22 வயது இளைஞனைக் கொலை செய்து புதைத்ததாகக் கூறி அரச சாட்சியாக மாறிய மட்டக்களப்பு சந்திவெளியைச் சேர்ந்த இனியபாரதியின் சகாவான அலோசியஸ் சுரேஸ் கண்ணா (ஜுட்) வின் வாக்குமூலத்திற்கமைவாகவே இன்று (31.07.2025) இவ் அகழ்வுப் பணி நடைபெற்றது.

இந்த அகழ்வுப் பணியானது அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி திரு.ACL றிஸ்வான் அவர்களின் மேற்பார்வையில் திருக்கோவில் பிரதேச சபை JCB இயந்திரம் மூலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது..

திருக்கோவில்,தம்பிலுவில் மயானத்தில் நடந்த அகழ்வுப் பணியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்வான்,குற்றப் புலனாய்வு அதிகாரிகள்,தடயவியல் அதிகாரிகள்,பொலீசார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மயானத்தின் பல இடங்களிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற போதும் எதுவித சான்றுப் பொருட்களோ,தடயங்களோ மீட்கப்படாத நிலையில் அகழ்வுப் பணி நிறுத்தப்பட்டது.