இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பும் அவசியம் என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்ட புலம்பெயர் தமிழர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, சிங்கள தேசியவாதம் தமிழர்களிற்கு எதிரான பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இலங்கை தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களையும் தமிழர்களிற்கான உரிமைகளையும் எதிர்த்துவந்துள்ளது.
இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பும் அவசியம்.
இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை எதிர்கொள்வதற்கும் தென்னாசியாவில் பாதுகாப்புஸ்திரதன்மைக்காகவும் அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் அதற்கு ஆதரவளிக்கவேண்டும்.