இந்திய முன்னாள் அரச தலைவர் முகர்ஜி கொரோனோவுக்கு பலி

கொரோனோ நோயினால் பாதிக்கப்பட்டு புதுடில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் முன்னாள் அரச தலைவர் பிரணாப் முகர்ஜி (84) சிகிச்சை பயன்தராததால் இன்று (31) மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.

அவர் மரணமடைந்தது தொடர்பான தகவலை அவரின் மகன் அபிஜித் முகர்ஜி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.