இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
யாழ். காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும், அதிலிருந்த நான்கு இந்திய மீனவர் களையும் எல்லை தாண்டி மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினர் கைது செய்தனர்.
கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களைக் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் கடற்படையினா் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
