இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் – விஜித ஹேரத்

புதிய அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எங்கள் கலாசார உறவுகளையும்  மற்றும் சிறந்த இருதரப்பு உறவுகளை எங்கள் மக்களின் பரஸ்பர நன்மைக்காக வலுப்படுத்துவதற்காகவும் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கான எங்களது உறுதிப்பாட்டை மீள வலியுறுத்துகின்றேன் என விஜித ஹேரத் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் வாழ்த்து செய்திக்கு பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.