இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள் நாடு கடத்தல்!

இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படும் நிலையில், இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் நேற்று (02) கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அவர்கள் இன்று (03) பிற்பகல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

அதேநேரம், குறித்த மூவரும் எப்போது இந்தியாவுக்கு சென்றவர்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த வாரமும் இரண்டு சிங்களவர்கள் மற்றும் ஒரு தமிழர் ஆகியோர், தமிழகம் தனுஸ்கோடி கரைக்கு படகு மூலம் சென்றபோது கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.