2025 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் முடிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துள்ளன.
எனினும் 50க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் புதிய முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களின் கீழ் சபைகள் இன்னும் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கோரம் இன்மை, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடத் தவறியமை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, வண்ணாத்துவில்லு பிரதேச சபையால் இன்னும் ஒரு சபையை அமைக்க முடியவில்லை.
முழு உறுப்பினர்களில் 50 வீதமானோர் சபைக்கு வரவில்லை, இதன் விளைவாக கோரம் இல்லாமல் போயுள்ளது. அத்துடன், சில உறுப்பினர்கள் வேண்டுமென்றே வருகையைத் தவிர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தாமதமாகிவிட்டதாக உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.