தாய்லாந்து பிரதமர் அலுவலகத்தின் பிரதி அமைச்சர் ஜெனரல் நிபாட் தொங்லெக், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கடந்த திங்கட்கிழமை (10) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடியதுடன், மியன்மாரில் தற்போது ஆபத்தில் சிக்கியுள்ள எஞ்சிய 18 இலங்கையர்களை விடுவிக்க தொடர்ந்தும் ஆதரவினை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார்.
தாய்லாந்து – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் அவ்வேளை கலந்துரையாடப்பட்டது.



