அமெரிக்கா உருவாக்கப்போகும் விடுதலை இயக்கம் :வேல்ஸில் இருந்து  அருஸ்

மீண்டும் கிறீன்லாந்து பிரச்சினை சூடு பிடித்துள்ளது.அதாவது கிறீன்லாந்தை கைப் பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்பின் நோக்கம் செயல்வடிவம் பெறுவதற்கான நடை வடிக்கைகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்த நோக்கத்திற்காக இரண்டு திரைமறைவு நடை வடிக்கைகளை அமெரிக்காவின் புலனாய்வுத் துறையினர்  மேற்கொண்டுள்ளனர். ஒன்று கிறீன் லாந்தை தன்வசம் வைத்துள்ள டென்மார்க் மீது அபகீர்த்தியை ஏற்படுத்துதல். அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.
அதன் வெளிப்பாடாகவே. கிரீன்லாந்தில் வாழும் பழங்குடி மக்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டாயப்படுத்தப் பட்ட கருத்தடை  திட்டத்தில் ஆயிரக்கணக்கான இளம் கிரீன்லாந்து பெண்கள் மற்றும் சிறுமி களுக்கு அவர்களின் ஒப்புதல் இல்லாமல் கருப் பையக சாதனங்கள் (IUDs) பொருத்தப் பட்டுள் ளன என்ற செய்திகள் தற்போது முதன்மை பெற்றுள்ளன. இது தொடர்பில் டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மன்னிப்பு கோரியுள்ளார்.“நடந்ததைநாம்மாற்றமுடியாது. ஆனால் நாம் பொறுப்பேற்க முடியும். எனவே,டென்மார்க் சார்பாக, நான் மன்னிப்பு கோரவிரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை 1960கள் மற்றும் 1970களில் இடம்பெற்றிருந்தது, 2022 வரை இது தொடர்பில் பெரும்பாலும் அறியப்படவில்லை. அந்த ஆண்டு, டேனிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பாட் காஸ் ட்ஸ்பைரல் காம்பாக்னென்  (திஸ் பைரல் பிரச் சாரம்) 4,500 பெண்கள் மற்றும் சிறுமிகள் வரை ஒப்புதல் இல்லாமல் கருத்தடை சாதனங்கள் உடலில் பொருத்தப்பட்ட பதிவுகளை வெளிக்கொண்டு வந்திருந்தது.
சில பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு அவர்களுக்கு தெரியாமல் சாதனங்கள் பொருத் தப்பட்டன,  மற்ற சந்தர்ப்பங்களில் மொழித்தடை அவர்கள் கருத்தடை நடைமுறையைப் புரிந்து கொள்ளவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் பொது மக்களின் சீற்றத்தை அதிகரித்துள்ளன, மேலும் பொறுப்புக் கூறலுக்கான புதிய கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
ஆனால் இது ஒரு திட்டமிட்ட இன அழிப்பின் வடிவம் என்பதை நாம் மறுக்க முடி யாது. இலங்கையிலும் போர் நிறைவு பெற்ற பின்னர் 2010 ஆம் ஆண்டுகளில் கிளிநொச்சியில் பல பெண்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் கருத்தடைகள் செய்யப்பட்டன என்ற குற்றச் சாட்டுக்கள் எழுந்திருந்தன.தற்போது டென்மார்க் மீது இனஅழிப்பு குற்றம் சுமத்தப் பட்டாலும் அதனை மறுக்க முடியாது.
அதே சமயம், டென்மார்க்கின் மட்டுப் படுத் தப்பட்ட தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தில் அமெரிக்காவின் தலையீட்டை அதிகரிப்பதற்கான புலனாய்வு நடவடிக்கைகள் இரகசியமாக ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக  வெளிவந்த தகவல்கள் தொடர்பாக, டென்மார்க் நாட்டின் உயர்மட்ட அமெரிக்க தூதரை டென்மார்க் அரசு வரவழைத்து இந்த வாரம் பேசியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பு டன் தொடர்புடைய மூன்று அமெரிக்கர்கள் கிரீன் லாந்தில் நடைவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக டென்மார்க்கின் தேசிய ஊடகங்கள் தெரி வித்துள்ளன. அவர்களின் கருத்துப்படி பாது காப்பு அதிகாரிகள் உட்பட எட்டு உள்ளூர் அதி காரிகளும் இந்த நடைவடிக்கையில் ட்றம் பின் அதிகாரிகளுடன் இணைந்துள்ளனர்.  அவர் களுக்கு கொடுக்கப்பட்ட பணிகள் என்பது  கிரீன் லாந்துக்கும் டென்மார்க்கிற்கும் இடையி லான உறவுகளை பலவீனப்படுத்துவது, பிரி வினை வாத இயக்கத்திற்கு ஆட்களை ஆட் சேர்ப்பது என்ற நோக்கங்களைக் கொண்டது. கோபன்ஹேகனில் இருந்து பிரிந்து செல்வதை ஆதரிக்கும் கிரீன்லாந்துவாசிகளின் பட்டியல்களை ஒரு செயல்பாட்டாளர் சேரித்து வருவதாக தெரிவிக் கப்படுகின்றது.
கிறீன்லாந்தில் உள்ள மக்களுடன் உறவு களை ஏற்படுத்தி அவர்களை டென்மார்க்கிற்கு எதிராக திரும்பும் பணிகள் அங்கு இரகசியமாக இடம்பெற்றுவருவதாக டென்மார்க்கின் PET என்ற உளவுத்துறை தெரிவித்துள்ளதுடன், அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக தமது புலனாய்வு நடைவடிக்கைகளை கிரீன்லாந்தில் வலுப்படுத்தி யுள்ளதாக PET தெரிவித்துள்ளது.
டென்மார்க்கின் உள் விவகாரங்களில் எந்தவொரு தலையீடும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் வலியுறுத்தியுள்ளார், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர விரும்புவதாக டிரம்ப் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார், அந்த தீவை ஒரு மூலோபாய ரீதியாக முக்கியமான சொத்து என்று அவர் அழைக்கிறார். அந்த இலக்கை அடைய இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதை கூட அவர் நிராகரிக்கவில்லை, ஆர்க்டிக்கில் அதன் கனிம வளத்தையும் அதன் தேவையையும் அவர் வலியுறுத்தி வருவதுடன்,அது ஒரு அழகான பனிக்கட்டி என்பதால் அல்ல, ஆர்க்டிக் பிராந்தியத் தின் பாதுகாப்பு, ஏவுகணை எச்சரிக்கை தளங்கள் மற்றும் இராணுவ மேன்மைக்கு பூமியில் மிகவும் மூலோபாயமான  இடம் என்பதால் அது தமக்கு தேவை என தெரிவித்துள்ளார்.
ஆர்க்டிக்கை கைப்பற்றுவதில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் பரந்த போட்டியின் மத்தியில் கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சிப் பதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த பிராந்தியத்தை வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான “மகத்தான ஆற்றல்” கொண்ட ஒரு மண்டலம் என்று விவரித்துள்ளார். அதாவது  அமெரிக்கா வடக்கில் ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.
எனவே கிறீலாந்துவிவகாரம் மிகப்பெரும் பிரச்சினையாக மாறப்போகிறது. மூலோபாய ஆதிக்கம் தேவைப்படும் பெரிய சக்திகளுக்கு சிறிய நாடுகள் தடையாக நிற்கும்போது என்ன நடக்கும் என்பதை வரலாறு எமக்கு கற்றுத்தந்துள்ளது. உலகில் நடக்கும் மற்றும் நடந்த பல போர்களின் பின்னணியும் அதுவே. பல நாடுகள் சுதந்திரம் பெற்று தனிநாடு ஆகியதற்கும், பல இனங்கள் ஆதிக்க சக்திகளிடம் அகப்பட்டு தொடர்ந்து அடிமையாக வாழ்வதற்கும் அதுவே காரணம்.
கிறீன்லாந்து மிகப் பெரியது, அதன் மக்கள் தொகை மிகச் சிறியது,அதாவது சுமார் 5 மில்லியன் மட்டுமே. தீவைத் தாங்களே திறம்படக் கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு மிகக் குறைவு. தீவின் குறிப்பிடத்தக்க பகுதிகள் முற்றிலும் மக்கள் வசிக்காதவை. அனைத்து மக்களும் சில சிறிய நகரங்களில் குவிந்துள்ளனர். ஆனால் அவர்களின் தலைவிதியை அமெரிக்கா மற்றும் டென்மார்க் தீர்மானிக்கக்கூடாது என்ற கருத்துக்களும் உண்டு. எனினும், முழு தீவின் மீதும் அவர்களுக்கு அதிகார மில்லை என்றும் கூறப்படுகின்றது. மக்கள் வசிக் காத பகுதிகள் அமெரிக்கா, நோர்வே, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வற்றிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்க ளும் உள்ளன.
தீவை திறம்படக் கட்டுப்படுத்தவும், பாது காக்கவும், பயன்படுத்தவும் டென்மார்க்கிடம் எந்த வளங்களும் இல்லை. டென்மார்க் ஒரு மிகச் சிறிய நாடு, ஏற்கனவே அமெரிக்கர்கள் தங்கள் இரண்டு இராணுவத் தளங்களுடன் தீவில் பாதுகாப்பை வழங்குகிறார்கள். இருப்பினும், தீவு உண்மையில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும், ரஷ்யா, சீனா அல்லது நாடற்ற தேசத்து மக்கள் இந்த கட்டுப்பாடற்ற நிலத்தைப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா முற்பட்டு நிற்பதுடன், காலநிலைமாற்றத்தால் உருகிவரும் பனிப்பாறைகளும் ஆர்க்டிக் பிராந்தியத்தின் கனிம வளங்களை வெளிக்கொண்டுவருவதும் பிரதான காரணம்.
பூமியின் துருவங்கள் நகர்கின்றன – கிரீன் லாந்து மற்றும் அண்டார்டிகா மிக வேக மாக உருகி வருகின்றன, அவை கிரகத்தின் கட்டமைப்பை மாற்றுகின்றன – மேலும் பூமியின் துருவங்களை நகர்த்துகின்றன. 1900 முதல் 2018 வரையிலான தரவுகளை பகுப்பாய்வு செய்த விஞ்ஞானிகள், காலநிலை மாற்றம் ஏற்கனவே பூமியின் அச்சை மாற்றியமைத்து,GPS, செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி பயணங்களை கூட சீர்குலைத்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர். தற்போதைய விகிதத்தில் பனிப்பாறைகள் மறைந்து கொண்டே போனால்,2100 ஆம் ஆண்டுக்குள் துருவங்கள் 90 அடி வரை நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.
அதாவது பாதுகாப்புக்கு அப்பால் தற் போது மனிதர்கள் செல்லக்கூடிய பகுதிகளாக மாறிவரும் கிறீன்லாந்தின் அடியில் உள்ள கனிம வளம் தான் தற்போது அமெரிக்காவின் கவனத்திற்கான காரணம். டென்மார்க்கிடம் கனிமவளங்களை தாங்களாகவே பிரித்தெடுக்கும் தொழில்நுட்பமோ வளங்களோ இல்லை. அமெரிக்காவிடம் அந்த வளங்கள் இருந்தபோதும்  அவர்கள் அதை டென்மார்க்கின் நலனுக்காக செய்ய விரும்பவில்லை. இந்த முடக்கம் யாருக்கும் பயனளிக்காது என்பதே அமெரிக்காவின் வாதம். ஆனாலும் அதனை தனது நேட்டோ கூட்டாளிக ளுடன் பகிர்ந்துகொள்ளவும் அமெரிக்கா விரும்ப வில்லை.
அதாவது உக்ரைனை தொடர்ந்து நேட்டோ கூட்டணி மோதும் மற்றுமொரு களமாக கிறீன்லாந்து இருக்கப்போகின்றது. ஆனால் அதனை நேரடியாகச் செய்யாமல் மறைமுகமாகச் செய்வதற்காக அமெரிக்கா ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கப்போகின்றது. அதன் முதற்கட்டமே புலனாய்வு அதிகாரிகளின் தரையிறக்கம்.